நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்கக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தனது உரையை தொடங்கும் முன் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். மேலும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவித்து அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.