திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி நிர்வாகிகள் குழு கலைப்பு - மம்தா அதிரடி

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி நிர்வாகிகள் குழு கலைப்பு - மம்தா அதிரடி
திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி நிர்வாகிகள் குழு கலைப்பு - மம்தா அதிரடி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி நிர்வாகிகள் குழுவை கலைத்து அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர் புதிதாக 20 பேர் கொண்ட செயற்குழு ஒன்றை அவர் அறிவித்துள்ளார். திரினாமுல் காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த சூழலில் கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுவை கலைத்து தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே இருப்பதை உறுதி செய்துள்ளார் மம்தா பான்ர்ஜி. தேசிய நிர்வாகிகளை அவர் பின்னர் அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் தேசிய பொதுச்செயலாளராக இருந்த மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜி தனது பதவியை இழந்துள்ளர். எனினும் அவருக்கு செயற்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com