நாகலிங்கம், நானே வருவேன், தேசிய பறவை உள்ளிட்டப் படங்களை இயக்கி தயாரித்தவர் நடிகர் பாபு கணேஷ். அந்தப் படங்களில் திரையரங்குகளில் உலகிலேயே முதன்முறையாக ’வாசனை’ முறையை அறிமுகப்படுத்தியவர், தற்போது இயக்கிவரும் ’காட்டுப்புறா’ படத்தினையும் இதே முறையில் இயக்கியுள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இயக்கிவரும் ’லீ மஸ்க்’ திரைப்படத்தில், இதே உத்தியை கடைபிடித்து வருவதாகவும் உலகிலேயே முதன்முறையாக தான் மட்டும்தான் பயன்படுத்துவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பாபு கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.