பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம்: உருமாறிய கொரோனாவா?

பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம்: உருமாறிய கொரோனாவா?
பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம்: உருமாறிய கொரோனாவா?

பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம் உள்ளது என புனே நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.  

இன்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் " பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம் உள்ளது என புனே நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து அனுப்பியுள்ள 13 மாதிரிகளின் முடிவுகள் மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை புனே ஆய்வறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் 2 வது பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. 2-வது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு ஆலோசனை நடத்தி மத்திய அரசு அறிவிக்க உள்ளது. அனைத்து மாநில மாதிரி முடிவுகளை பெற்ற பிறகே எந்தவகையாக கொரோனா உருமாற்றமடைந்துள்ளது என்பது பற்றி தெரியவரும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com