’நான் கர்ப்பமானதே தெரியல’: விமானத்தில் குழந்தை பெற்ற வீராங்கனை திடுக்!

’நான் கர்ப்பமானதே தெரியல’: விமானத்தில் குழந்தை பெற்ற வீராங்கனை திடுக்!
’நான் கர்ப்பமானதே தெரியல’: விமானத்தில் குழந்தை பெற்ற வீராங்கனை திடுக்!

டெல்லி வந்த விமானத்தின் கழிவறையில் குறை மாதத்தில் பிரசவித்த விளையாட்டு வீராங்கனையின் வாக்குமூலத்தால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து கவுகாத்தி வழியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானம் நேற்றுமுன் தினம் வந்தது. விமானம் தரையிறங்கும் முன், விமான நிலைய கழிவறைக்கு விமான ஊழியர் ஒருவர் சென்றார். அப்போது அங்கு குறை மாத கரு ஒன்று ரத்தக்கறையுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விமானிக்கும் அங்குள்ள விமான பணியாளர்களிடம் தெரிவித்தார். ஏர் ஏசியா விமான மேலாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் விமானப் பணியாளர்கள் யாரையும் கீழே இறங்கவிடவில்லை. போலீசார் விமானப் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் முக்கால் மணி நேரத்துக்குப் பின் ஆண் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். 

ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு 19 வயது விளையாட்டு வீராங்கனைதான் இந்தக் கருவை பிரசவித்தது என்பது தெரிய வந்தது. கவுகாத்தியில் இருந்த வந்த அந்த டேக்வோண்டோ வீராங்கனை தென் கொரியாவில் நடக்கும் போட்டிக்குச் செல்ல இருந்தவர். அவருடன் பயிற்சியாளரும் இருந்தார்.அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதை ஒப்புக்கொண்டார் அவர். பின்னர் மருத்து வமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். எந்த பரிசோதனைக்கும் அவர் உட்பட மறுத்துவிட்டார். 

பின் போலீசார் அவரிடம் விசாரித்தனர். ‘நான் கர்ப்பமானதே எனக்கு தெரியவில்லை. எங்கள் குடும்பத்தினருக்கும் தெரியாது’ என்று அவர் கூறியுள்ளார். இதை அவர் உறவினர் உறுதிபடுத்தினார். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com