பல மாத சிகிச்சைக்குப் பின் சமீபத்தில் கனடாவில் இருந்து கொச்சி திரும்பினார் தன்யா சோஜன். அப்போது வரும் வழியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணைக்கவரும் நகை விளம்பர பேனர் ஒன்று தன்யா சோஜனின் கவனத்தை ஈர்த்தது. அந்த பேனரை செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, "நானும் இதுபோன்று நகைகள் அணிந்து போட்டோஷூட் எடுக்க விரும்புகிறேன். மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ், உங்கள் ஆபரணங்களை அணிந்து, உங்களுக்காக ஒரு விளம்பரத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க முடியுமா?'' எனப் பதிவிட்டிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவரது பதிவின் கமெண்டில் 'மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' நிறுவனம் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்தது.