\
சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு

சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு

சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு
Published on

பக்தர்கள் யாரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரவேண்டாம் எனத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் ஓணம் திருநாளையொட்டி வழிபாட்டுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்வது வழக்கம். வரலாறு காணத மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால் கேரளம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே கிடப்பதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

மேலும் பம்பையாற்றில் இன்னும் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. இதனால் வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com