ரஃபேல் விவகாரத்தில் மறுஆய்வு விசாரணை தேதியை நிர்ணயிக்க நீதிபதிகள் முடிவு - அருண் ஷோரி

ரஃபேல் விவகாரத்தில் மறுஆய்வு விசாரணை தேதியை நிர்ணயிக்க நீதிபதிகள் முடிவு - அருண் ஷோரி
ரஃபேல் விவகாரத்தில் மறுஆய்வு விசாரணை தேதியை நிர்ணயிக்க நீதிபதிகள் முடிவு - அருண் ஷோரி

ரஃபேல் விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிப்பதற்கான தேதியை விரைவில் நிர்ணயிக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளதாக மனுதாரர் அருண் ஷோரி தெரிவித்துள்ளார். 

ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் ‌மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்ச‌நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. 

இதனையடுத்து மத்திய அரசு ரஃபேல் வழக்கில் பல தகவல்களை மறைத்துள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணையை நடத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் ‌அமர்வு இதனை விசாரித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ரஃபேல் ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும் என்று 3 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

தீர்ப்புக்கு பின் பேசிய மனுதாரர் அருண் ஷோரி, ஆவணங்கள் பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதால் அவற்றை ஆராய வேண்டும் என்பதே எங்கள் வாதமாக இருந்தது. அதற்கு ஆதாரங்களை உச்ச நீதிமன்றம் கேட்டது. அதனை நாங்கள் வழங்கி இருக்கிறோம். அதனால் எங்களின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ரஃபேல் விவகாரத்தில் 3 நீதிபதிகளும் அளித்த தீர்ப்பில் மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது.சீராய்வு  மனுக்களை விசாரிப்பதற்கான தேதியை விரைவில் நிர்ணயிக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.  இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது குறித்து விசாரணையில் விளக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com