சாலை விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் - காவலர்களுடன் வாக்குவாதம்

சாலை விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் - காவலர்களுடன் வாக்குவாதம்
சாலை விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் - காவலர்களுடன் வாக்குவாதம்

போக்குவரத்து விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் விஜய் கோயலுக்கு டெல்லி போக்குவரத்து காவலர்கள் நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீவிர சோதனையில் டெல்லி போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் அமைச்சர் விஜய் கோயல் ஒற்றை இலக்க எண் கொண்ட வாகனத்தை பயன்படுத்தியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜய் கோயல், பின்னர் அபராதத் தொகை நான்காயிரம் ரூபாயை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் பயன்படுத்தும் திட்டம் வெறும் கண்துடைப்பு என்றும், வைக்கோல் எரிப்பதால் வரும் புகைக்கு இந்தத் திட்டம் எப்படி கைகொடுக்கும் எனவும் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com