டெல்லி போராட்ட வன்முறை: சித்தானா குறித்து தகவல் சொன்னால் ரூ.1 லட்சம் பரிசு

டெல்லி போராட்ட வன்முறை: சித்தானா குறித்து தகவல் சொன்னால் ரூ.1 லட்சம் பரிசு
டெல்லி போராட்ட வன்முறை: சித்தானா குறித்து தகவல் சொன்னால் ரூ.1 லட்சம் பரிசு

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின டெல்லி வன்முறையிலிருந்து தலைமறைவாக உள்ள லக்கா சித்தானா, வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் தனது கடைசி வீடியோவில் டீப் சித்துவை ஆதரிக்குமாறு வலியுறுத்தினார்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையில் சதிகாரர் என்று கூறப்படும் லக்கா சித்தானா குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு டெல்லி காவல்துறை ரூ .1 லட்சம் பரிசாக அறிவித்துள்ளது. எந்தவொரு வன்முறையும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்ற உறுதிமொழிக்கு பின்னர் டெல்லி காவல்துறையினரால் டிராக்டர் பேரணிக்கான அனுமதி வழங்கப்பட்டது.

டெல்லி காவல்துறையின் குழுக்கள் மற்றும் சிறப்புப் பிரிவு குழுக்கள், சித்தானா சிங்கு அல்லது திக்ரி எல்லையில் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறார்கள், அங்கிருந்து அவர் வீடியோக்களை உருவாக்குகிறார். டெலிகிராம் மற்றும் சிக்னல் பயன்பாடுகளில் வீடியோக்களை தனது ஆதரவாளர்களுக்கு அனுப்புகிறார். பின்னர் அவர் தனது ஃபேஸ்புக் கணக்கில் பதிவேற்றுகிறார் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில் சித்தானா கைது செய்யப்படுவார் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

டீப் சித்து தனக்கு லக்கா சித்தானா தெரியும் என்றும், ஆனால் வன்முறை வெடித்தபோது அவருடன் எந்த முன் சதி திட்டமும் இல்லை என்று கூறினார். இந்திய தண்டனைச் சட்டம் , பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கொட்வாலி காவல் நிலையத்தில் சித்தானா மற்றும் பலர் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com