காதலியின் குடும்பத்தினரால் பட்ட பகலில் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர்! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

டெல்லி ஜாஃப்ராபாத்தில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
delhi murder
delhi murdertwitter

ஜாஃப்ராபாத் பகுதியில் 25 வயது இளைஞன், அவர் காதலித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களால் கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் படுகொலை செய்யப்பட்டவர் சல்மான் எனபதும் அவர் காதலியின் தந்தை மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட மூவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார் என்பதும் தெறியவந்துள்ளது.

சல்மான் தனது இருசக்கர வாகனத்தில் ஜாஃப்ராபாத் பகுதி சாலையில் வந்துள்ளார். அப்போது பதுங்கிருந்த பெண்ணின் தந்தை மன்சூர், சகோதரர் மோஷின் உள்ளிட்ட மூவர். சல்மானை கத்தியால் தாக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியில் மூவர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சல்மானை மீண்டும் மீண்டும் தாக்குவதும் அதனால் அவர் உயிரிழக்கும் காட்சிகளும் உள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சல்மான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் பழகி வந்ததும் அவர்களின் உறவுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஜாஃப்ராபாத்தின் சவுகான் பாங்கரில் உள்ள கல்யாண் திரையரங்கிற்கு அருகில் கத்திக்குத்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அதில் சல்மான் கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கொலையாளிகளான மன்சூர், மற்றும் அவரது மகன்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

- எம்.கே.அரவிந்த்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com