டெல்லி மதுபான கொள்கை வழக்கு: சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு மீண்டும் சம்மன்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு, அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில், 2021-22ஆம் நிதியாண்டில், ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அந்த மதுபானக் கொள்கை, தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் அதன்மூலம், 100 கோடி ரூபாய் வரை ஆம்ஆத்மி கட்சியினர் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரத் ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா, கடந்த மார்ச் மாதம் ஆஜரானார். இந்நிலையில், கவிதாவுக்கு மீண்டும் அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com