நிர்பயா வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

நிர்பயா வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
நிர்பயா வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் தனித்தனியே தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி, திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நாட்டையே அதிரச் செய்த நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கும் தனித்தனியே தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி, திகார் சிறை நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுரேஷ் கைத் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முயல்வதால்தான் ஐதராபாத் என்கவுன்ட்டர் போன்ற சம்பவங்களை மக்கள் கொண்டாடுவதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார். நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் கடந்த 7 ஆண்டுகளாக நீதித்துறையுடன் விளையாடுவதாகவும், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு குற்றவாளிகள் தரப்பில், கடைசிமூச்சு உள்ள வரை சட்டப்போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்றும், நால்வருக்கும் ஒன்றாகத்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com