“சிகிச்சையில் வயதானவர்களை விட இளைய வயதினருக்கே முன்னுரிமை” - டெல்லி உயர்நீதிமன்றம்

“சிகிச்சையில் வயதானவர்களை விட இளைய வயதினருக்கே முன்னுரிமை” - டெல்லி உயர்நீதிமன்றம்

“சிகிச்சையில் வயதானவர்களை விட இளைய வயதினருக்கே முன்னுரிமை” - டெல்லி உயர்நீதிமன்றம்
Published on

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகள் கிடைப்பது தொடர்பான வழக்கில் அதிகமாக வாழ்ந்த வயதானவர்களை விட இளைய வயதினருக்கே முன்னுரிமை அளிக்க முடியும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான மருந்துகளின் பற்றாக்குறை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி இப்போது இரண்டு வாரங்களாக நாட்டில் பற்றாக்குறை உள்ளது என்று கூறியது. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கான நேரம் இது என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்து விநியோகம் குறித்த கொள்கை முடிவை எடுக்குமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

முன்னதாக, மியூகோமிகோசிஸ் (கருப்பு பூஞ்சை) சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி கூடுதல் 80,000 குப்பிகளை அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா மே 27 அன்று தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com