ரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை

ரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை
ரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை

ரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை செய்தார்.

பிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். பிரான்ஸில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது. 

அதேபோல், விமானத்தின் மீது தேங்காய், பூக்கள் வைத்தும் முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதினார் ராஜ்நாத் சிங். விமானத்திற்கு கயிறு கட்டிய பின்னர் டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. 

இதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய போது, “ரஃபேல் விமானத்தின் செயல்பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன். இந்தியா - பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com