போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை
போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ராஜ்நாத் சிங், தேசிய போர் நினைவு சின்னத்தில் இன்று மரியாதை செலுத்தினார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, மோடி 2-வது முறையாக, பிரதமராக பதவி ஏற்றார். அவருடன்  25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ராஜ்நாத் சிங்குக்கு அமைச்சரவையில் இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மோடி அரசில் உள்துறையை கவனித்து வந்த அவருக்கு இந்த முறை பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் இன்று காலை டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்துக்குச் சென்று மரியாதைச் செலுத்தி னார். அவருடன் ராணுவ தளபதி பிபின் ராவத், கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ்.டா ணா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சராக இன்று முறைப்படி பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com