பிரதமர் மோடியின் மன் கி பாத் உரைக்கு நடிகைகள் தீபிகா படுகோனே, கரீனா கபூர் ஆதரவு..!

பிரதமர் மோடியின் மன் கி பாத் உரைக்கு நடிகைகள் தீபிகா படுகோனே, கரீனா கபூர் ஆதரவு..!

பிரதமர் மோடியின் மன் கி பாத் உரைக்கு நடிகைகள் தீபிகா படுகோனே, கரீனா கபூர் ஆதரவு..!
Published on

மன் கி பாத்-தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் உரைக்கு தீபிகா படுகோனே மற்றும் கரீனா கபூர் ஆகியோர் தங்கள் ஆதரவைப் பகிர்ந்துள்ளனர்.

பெண்கள் அதிகாரம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் உரைக்கு, ட்விட்டரில் தனது ஆதரவைப் பகிர்ந்து கொண்ட நடிகை தீபிகா படுகோனே, பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பிரதமரின் உரையிலிருந்து சில பகுதிகளை அவர் மறு ட்வீட் செய்து, அதில் தனது கருத்துகளையும் சேர்த்துள்ளார். தீபிகா தனது ட்வீட்டில் மகாத்மா காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார். “உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக முதலில் நீங்களே இருங்கள் "என்று அவர் எழுதினார்.

இதேபோன்று நடிகை கரீனா கபூரும் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். "இடைவிடாத வணிக விமானங்களில் பறப்பது முதல் குடியரசு தின அணிவகுப்புகளில் பங்கேற்பது வரை, அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் இன்று அச்சமற்றவர்களாக, தைரியமானவர்களாக மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் சமமான பங்கேற்பாளர்களாக உள்ளார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மான் கி பாத்-தின் 73 வது உரை, 2021 ஆம் ஆண்டின் முதல் உரையாக நேற்று பிரதமர் மோடி பேசினார். பல்வேறு துறைகளை வரவேற்று, நாட்டின் பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி விவாதித்த பிரதமர், நாட்டின் பெண்களின் பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் பங்களிப்பையும் கோடிட்டுக் காட்டினார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் விமானிகளான இரண்டு ..எஃப்  அதிகாரிகள் பெண்கள்தான் என தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் மூன்று மகளிர் போர் விமானிகளில் ஒருவரான, விமான லெப்டினன்ட் பவானா காந்த், குடியரசு தின அணிவகுப்பில் இந்திய விமானப்படை குழுவில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி ஆனார். ஃபிளைட் லெப்டினன்ட் சுவாதி ரத்தோர் ராஜ்பாத், ஃப்ளை பாஸ்டில் அங்கம் வகித்த முதல் பெண்மணி ஆனார் என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com