\
Days after joining BJP TMC Ex MPs fielded for Rajya Sabha bypoll
பாஜகPt web

பாஜகவில் இணைந்த சில நாட்களில்.. இடைத்தேர்தலில் போட்டி.. TMC Ex MP-களுக்கு அதிர்ஷ்டம்!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பிக்களுக்கு, இடைத்தேர்தலில் நிற்க சீட் வழங்கப்பட்டுள்ளது.
Published on

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு எதிரான உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிருப்தி குழுவின் தலைவரான ரிதா ப்ரதா பானர்ஜி, அரூப் ராயைக் கட்சியின் புதிய தலைவராக அறிவித்து மம்தாவுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். அக்கட்சியைச் சேர்ந்த 20 எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரஸிருந்து விலகி, மூத்த தலைவர் ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் தேசியவாத இந்திய குடிமக்கள் (NCPI) கட்சியில் இணைந்தனர். இதனால், அடுத்தடுத்து மம்தா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்துவருகிறது.

பாஜக
பாஜகfile image

தவிர, அமலாக்க விசாரணையும் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியிலிருந்து விலகிய மாநிலங்களவை முன்னாள் எம்.பி.க்களான சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராய்க் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இவர்கள் மூவருக்கும் அடுத்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு இடைத்தேர்தலில் நிற்க பாஜக வாய்ப்பளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஜூலை 24 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com