அந்தக் கடிதத்தில், ''பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள மதுபான மாஃபியாவுக்கு எதிரான எனது செய்தி ஒன்று ஜூன் 9-ம் தேதி எங்களது சேனலில் வெளியானது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்பின்னர் என்னை சில மர்ம நபர்கள் பின்தொடர்வதாக தெரிகிறது. எனது செய்தி குறித்து மதுபான மாஃபியாக்கள் என்னை பழிவாங்க அலைகிறார்கள் என சந்தேகிக்கிறேன். இதனால் எனது குடும்பத்தினரும் மிகவும் கவலையடைந்துள்ளனர்" என்று சுலாப் ஸ்ரீவாஸ்தவா அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.