கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கீக்செரிவால் சிவன் கோயில் கருவறையை தலித் அர்ச்சகரான யது கிருஷ்ணா திறந்துவைத்தார்.
திருவாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என கேரள அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் தமது கனவு நனவாகி இருப்பதாக யது கிருஷ்ணா தெரிவித்துள்ளார். புலயர் சமூகத்தைச் சேர்ந்த 22 வயது யது கிருஷ்ணா திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனாவார்.