மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவிகிதம் முதல் 4 சதவிகிதம் வரை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அகவிலைப்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல், முன் தேதியிட்டு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதே நேரம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.