ஊதியம் மற்றும் பதவி உயர்வை நிறுத்தியது சிடிஎஸ்

ஊதியம் மற்றும் பதவி உயர்வை நிறுத்தியது சிடிஎஸ்
ஊதியம் மற்றும் பதவி உயர்வை நிறுத்தியது சிடிஎஸ்

பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிப்பதை, மூன்று மாதங்களுக்கு காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது. 

காக்னிசன்ட் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பதவி உயர்வு குறித்த தகவல்களை பணியாளர்களுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு, நிறுவனத்தின் மனித வளப்பிரிவு அதிகாரி ஜிம் லென்னாக்ஸ் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இருக்கும் என பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

மேலாளர் வரையிலான பதவியில் இருப்பவர்களுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஊதிய உயர்வாக அறிவிக்கப்படும். மூத்த மேலாளர்களுக்கு மாதாந்திர சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கு பதிலாக, மொத்தமாக ஒரு தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 2,62,000 பேரில், 1,50,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com