மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆதிவாசி சிறுமி பாலியல் வன்கொடுமை - சிஆர்பிஎப் வீரர் கைது !

மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆதிவாசி சிறுமி பாலியல் வன்கொடுமை - சிஆர்பிஎப் வீரர் கைது !
மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆதிவாசி சிறுமி பாலியல் வன்கொடுமை - சிஆர்பிஎப் வீரர் கைது !

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிஆர்பிஎப் படை வீரரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஆதிவாசி சிறுமி ஒருவர் காட்டில் மாடு மேய்த்து வந்துள்ளார். அப்போது சிஆர்பிஎப் வீரர் ஒருவர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தோர்னாபால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸார் சிஆர்பிஎவ் வீரரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து ஆதிவாசி தலைவர் மங்கல் ராம் கூறுகையில் "சம்பவம் தினத்தென்று அந்தச் சிறுமி மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது கேம்ப்பில் இருந்து வந்துக்கொண்டு இருந்த சிஆர்பிஎப் வீரர். அந்தப் பெண்ணிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். பின்பு அந்தப் பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்" என்றார்.

மேலும் "அந்தப் பெண் எங்களது கிராமத்துக்கு அழுதுக்கொண்டே வந்தார். ஆனால் அப்போது நடந்த விஷயங்களை எதையும் அவள் தெரிவிக்கவில்லை. பின்பு மறுநாள் தனது தாயிடம் நடந்த அத்தனை விஷயங்களையும் கூறியுள்ளார். அதன் பின்புதான் இந்தக் கொடூரச் சம்வம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்பு காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது" என்றார் மங்கல் ராம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com