காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 18 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 18 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 18 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 18 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய பாதுகாப்பு படையினர், ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் இலக்கு வைத்து தாக்கும் லாஞ்சர் மூலம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 54 பாதுகாப்பு வீரர்கள் வந்த ராணுவப் பேருந்து நிலை குலைந்தது. இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 18 உயிர்த்தியாகம் செய்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜைஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணையில், அடில் அகமது என்ற பயங்கரவாதியின் தலைமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ககாபொராவில் உள்ள புல்வாமா பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஜைஸ்-இ-முகமது இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்த கோரத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com