குழந்தைகள் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவது அதிகரிப்பு

குழந்தைகள் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவது அதிகரிப்பு

குழந்தைகள் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவது அதிகரிப்பு
Published on

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விகிதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் மொத்த கொரோனா பாதிப்பில் குழந்தைகள் எண்ணிக்கை 2.8 விழுக்காடாக இருந்தது. இதுவே ஆகஸ்ட் மாதம் 7.04 விழுக்காடாக உயர்ந்தது. அதாவது, இந்தியாவில் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களில் 7 பேர் குழந்தைகள்.

மிசோரம், மேகாலயா, மணிப்பூர், கேரளா மாநிலங்களில் குழந்தைகள் பாதிக்கப்படும் விகிதம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை கண்டு அஞ்ச வேண்டாம் எனத் தெரிவித்துள்ள நிபுணர்கள், எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com