துணைக்கு துரோகம் செய்ததாக பெண்ணுக்கு மொட்டை அடித்த கிராம மக்கள்..!

துணைக்கு துரோகம் செய்ததாக பெண்ணுக்கு மொட்டை அடித்த கிராம மக்கள்..!
துணைக்கு துரோகம் செய்ததாக பெண்ணுக்கு மொட்டை அடித்த கிராம மக்கள்..!

அசாமில் தகாத உறவு கொண்டதாக ஆண் மற்றும் பெண்ணை கிராம மக்கள் கட்டி வைத்து அடித்து துவைத்துள்ளனர். மேலும் அப்பெண்ணுக்கு அவர்கள் மொட்டையும் அடித்துள்ளனர்.

அசாம் மாநிலம் டுபுகி கிராமத்தை சேர்ந்தவர் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பக்கத்து கிராமத்தில் உள்ள பெண்ணை சந்திப்பதற்காக இரவு நேரத்தில் அந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அப்பெண் வீட்டிற்கும் சென்றுள்ளார். இதனால் கிராம மக்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கூடியிருக்கின்றனர். இருவரும் தங்களின் துணைக்கு துரோகம் செய்துவிட்டு தவறான உறவில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அருண் அங்கிருந்து ஓட முயற்சித்திருக்கிறார். ஆனால் அருணை விடாமல் பிடித்துவைத்த கிராம மக்கள் அங்கு ஒரு இடத்தில் கட்டி வைத்து வைத்துள்ளனர்.

பின்னர் அந்தக் கும்பலில் இருந்த ஒரு சில பெண்கள், அப்பெண்ணின் தலையை மொட்டை அடித்திருக்கின்றனர். பலபேர் சேர்ந்து கடுமையாக தாக்கியதால் அவர்கள் இருவரின் ஆடைகள் ரத்தக் கறையானது. இரவு முழுக்க வந்தவர்கள், போனவர்கள் என எல்லோரும் அந்த இரண்டு பேரையும் தாக்கியிருக்கின்றனர். பின்னர் விடிந்ததும் இந்த விஷயத்தை அவர்கள் காவல்நிலையத்திற்கு தெரிவித்திருக்கின்றனர். போலீசார் அங்கு சென்றபோது அவர்கள் இருவரும் பரிதாபமான நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஊர்மக்கள் சட்டத்தை கையில் எடுத்து பொதுமக்களை கடுமையாக தாக்குவது இந்த மாதத்தில் மட்டும் அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com