5 மாநில இடைத்தேர்தல்கள் - உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவா? நிலவரம் என்ன?

 5 மாநில இடைத்தேர்தல்கள் - உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவா? நிலவரம் என்ன?
 5 மாநில இடைத்தேர்தல்கள்  - உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவா? நிலவரம் என்ன?

5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பீகாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பனுப்ரதாப்பூர், ஒடிசாவின் பாதம்பூர், ராஜஸ்தானின் சர்தார் சாகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் ராம்பூர் சதார், கத்துவாலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னிலை வகிக்கும் கட்சிகள்: 03:25 மணி நிலவரப்படி,

பீகாரில் குர்ஹானி தொகுதியில் பாஜக வேட்பாளர் கேதர் பிரசாத் குப்தா 76,722 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் இடம் பிடித்துள்ள ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் மனோஜ் கு சிங் 73,073 வாக்குகள் பெற்றுள்ளார்.

சத்தீஸ்கரில் பானுபிரதாப்பூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மனோஜ் மாண்டவி 65,479 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் பிரம்மானந்த் நேதம் 44308 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

ஒடிசாவின் பாதம்பூருக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தள வேட்பாளர் பர்ஷா சிங் பரிஹா 1,04,183 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் பிரதீப் புரோஹித் 68,887 வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியுள்ளார்.

ராஜஸ்தானின் சர்தார் சாஹர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அணில் குமார் ஷர்மா 91,357 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அஷோக் குமார் 64,505 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கத்தோலி தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தள் வேட்பாளர் மதன் பையா 74,285 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் ராஜ்குமாரி 60,814 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். இதேபோல், ராம்பூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா 54,069 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முகம்மது ஆசிம் ராஜா 40,472 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார்.

டிம்பிள் யாதவ் முன்னிலை: மெயின்புரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 03:35 மணி நிலவரப்படி சமாஜ்வாதி வேட்பாளர் டிம்பிள் யாதவ் 6,15,798 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யா, 3,28,986 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரை விட டிம்பிள் யாதவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் அவர் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com