தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்கின.
முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 8.15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 54 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.