இந்தியா
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு புதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்த, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி,
“ அனைத்து மாநில தேர்தல்களிலும், வாக்குப்பதிவுக்கான நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
வீடு, வீடாக வாக்கு சேகரிக்க 5 பேர் மட்டுமே செல்லவேண்டும்” என்று தெரிவித்தார்