கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் - பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் - பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் - பிரதமர் மோடி
Published on

கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி, நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி "உலகில் கொரோனாவுக்கான தடுப்பூசி எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். கொரோனா தொற்று முடியும் வரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். லடாக் எல்லையில் சோதனைகளை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். நாடு ஒன்று பட்டு ராணுவத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும். மேலும் பேசிய அவர் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எம்.பிக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com