இந்தியாவில் 3 ஆவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 3 ஆவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் 3 ஆவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தொடர்ந்து 3 ஆவது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்து 230 ஆக பதிவாகி உள்ளது. இது முந்தைய தினத்தைவிட 1,315 அதிகமாகும். நாட்டின் மொத்த பாதிப்பு 3 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் 555 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 23 ஆயிரத்து 217 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 155 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றில் இருந்து 3 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்து 972 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com