கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக - கேரள எல்லையான தென்காசி புளியரை பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து தமிழகம் வருவோரை கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்து, அங்கிருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com