இந்தியாவில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு – 24 மணி நேரத்தில் 4,454 பேர் பலி

இந்தியாவில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு – 24 மணி நேரத்தில் 4,454 பேர் பலி

இந்தியாவில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு – 24 மணி நேரத்தில் 4,454 பேர் பலி
Published on

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 4,454 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 4,454 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு 3 லட்சத்து 3 ஆயிரத்து 720 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3 லட்சத்து 2 ஆயிரத்து 315 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இந்தியாவில் இதுவரை 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 11 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டில் இதுவரை 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் தற்போது 27 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் இதுவரை 19 கோடியே 60 இலட்சத்து 51 ஆயிரத்து 962 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com