பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக கொரோனா கட்டுப்பாடே தேவை: சுப்பிரமணியன் சுவாமி

பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக கொரோனா கட்டுப்பாடே தேவை: சுப்பிரமணியன் சுவாமி
பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக கொரோனா கட்டுப்பாடே தேவை: சுப்பிரமணியன் சுவாமி

“நமக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தேவையானது” என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.

வேகமாக பரவிவரும் கொரோனாவின் இரண்டாவது அலையிலேயே இந்தியாவில் ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை 2 கோடி பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  2 லட்சம் பேருக்குமேல் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில், இந்தியாவின் மருத்துவத்துறை வல்லூநர்களும், அறிவியல் துறை வல்லுநர்களும் “இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது. தவிர்க்க முடியாது” என்று எச்சரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,  ”கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தேன். இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் மூன்றாவது அலை பேராபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உறுதியும் படுத்தியுள்ளார். நமக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தேவை” என்று கடுமையாக சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com