இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1573 ஆக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1573 ஆக உயர்வு!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , நேற்று முன்தினம் 1,805 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு , கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,300 ல் இருந்து 10,981 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் , 888 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.30 சதவீதம் ஆகவும் , வாராந்திர பாதிப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 0.02 சதவீதமாகும்., என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,20,958 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com