கொரோனா சிகிச்சை மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ! இளைஞர் கைது

கொரோனா சிகிச்சை மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ! இளைஞர் கைது

கொரோனா சிகிச்சை மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ! இளைஞர் கைது
Published on

மகாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சைப் பெற்று வரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது மகாராஷ்ட்டிரா. அதுவும் மும்பை மாநகர் கொரோனா பாதிப்பில் உச்சம் தொட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

நவி மும்பை பகுதியில் 40 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் கொரோனா சிகிச்சை மையத்தின் 5 ஆவது தளத்தில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி சிசிக்கைப் பெற்று வந்தார். அதே மையத்தின் 4 ஆவது தளத்தில் 25 வயதான இளைஞர் ஒருவர் இருந்திருக்கிறார். இந்த இளைஞர், 5 ஆவது மாடியில் இருக்கும் பெண்ணிடம் தன்னை டாக்டர் என அறிமுகம் செய்துக்கொண்டே அறையின் உள்ளே சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நவி மும்பை போலீஸார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com