கொரோனா: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 4,194 பேர் உயிரிழப்பு

கொரோனா: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 4,194 பேர் உயிரிழப்பு
கொரோனா: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 4,194 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 299 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 4,194 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 4,194 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு 2 இலட்சத்து 95 ஆயிரத்து 525 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3 இலட்சத்து 57 ஆயிரத்து 630 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இந்தியாவில் இதுவரை 2 கோடியே 30 இலட்சத்து 70 ஆயிரத்து 365 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 299 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், நாட்டில் இதுவரை 2 கோடியே 62 இலட்சத்து 89 ஆயிரத்து 290 பேருக்கு கோரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் தற்போது 29 இலட்சத்து 23 ஆயிரத்து 400 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 87.25% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.12 % ஆகவும் உள்ளது. நாட்டில் இதுவரை 19 கோடியே 33 இலட்சத்து 72 ஆயிரத்து 819 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com