கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார் மீது கிரிமினல் வழக்குப் பதிவு

கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார் மீது கிரிமினல் வழக்குப் பதிவு

கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார் மீது கிரிமினல் வழக்குப் பதிவு

பாலியல் தொடர்பான வழக்கை திரும்பப் பெறுமாறு கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பிரோன்கோ முலாக்கல் என்ற பாதிரியார் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புகாரளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அனுபமா என்ற மற்றொரு கன்னியாஸ்திரி இருந்து வருகிறார். இந்நிலையில் அனுபமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஞ்சிராப்பள்ளி பாதிரியார் ஜேம்ஸ் என்பவர் மிரட்டும் வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் வீடு உள்பட பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்றும் இல்லையெனில் கெடுபிடி நிறைந்த இடங்களுக்கு அவர்களை மாற்றிவிடுவதாகவும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். ஊடகங்களில் இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆடியோப்பதிவு வெளியான நிலையில், கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘கஞ்சிராப்பள்ளி காவல்நிலையத்தில் பாதிரியார் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை மறைக்க லஞ்சம் கொடுக்க முயன்றது, மிரட்டல் விடுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று வைக்கம் போலீஸ் அதிகாரி சுபாஷ் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com