தெலங்கானாவில் பயணிகளுடன் சேர்ந்து ராணுவ வீரர்கள் ரயிலை தள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. பொம்மப்பள்ளி என்ற இடத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீடியோவின்படி ரயிலில் இருந்த பயணிகள், ரயில்வே ஊழியர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் ரயிலைத் தள்ளினர்.
இதனிடையே, அந்த ரயிலில் தீப்பற்றியதாகவும், நெருப்பு மேலும் பரவாமல் இருக்க ரயில் பெட்டிகளைப் பிரிக்கும் நோக்கில் மனிதசக்தியில் தள்ள நேரிட்டதாக தெற்கு-மத்திய ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது