குஜராத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை
குஜராத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சைweb

குஜராத்| ’பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்க’ - காவல் துறை ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை!

குஜராத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க பெண்கள் வீட்டியிலேயே இருங்கள் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை வெடித்துள்ளது.
Published on

பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க வீட்டிலேயே இருக்குமாறு பெண்களை அறிவுறுத்தும் வகையில், குஜராத்தில் போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பெண்கள் வீட்டிலேயே இருங்கள்..

அகமதாபாத் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், நள்ளிரவு விருந்துகளில் பங்கேற்கக்கூடாது, இருள்சூழ்ந்த மற்றும் தனியான இடங்களுக்கு நண்பருடன் செல்லக்கூடாது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த சுவரொட்டிகளை தங்கள் அனுமதியின்றி தன்னார்வ அமைப்பினர் ஒட்டியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com