ஹேமமாலினியின் கன்னத்தை குறிப்பிட்ட சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் அமைச்சர்

ஹேமமாலினியின் கன்னத்தை குறிப்பிட்ட சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் அமைச்சர்
ஹேமமாலினியின் கன்னத்தை குறிப்பிட்ட சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் அமைச்சர்

”தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை ஹேமமாலினியின் கன்னம்போல் உள்ளது” என்று மகாராஷ்டிர மாநில அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாப்ராவ் பாட்டீல், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசினார். அப்போது, எதிர்க்கட்சியினர் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நேரில் வந்து பார்க்கவேண்டும் என்றும் அவை, நடிகை ஹேமமாலினியின் கன்னம்போல் இல்லை என அவர்கள் கருதும் பட்சத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் அவர் பேசினார்.

அமைச்சர் பேசும் காட்சி பொதுவெளியில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது பேச்சுக்காக குலாப்ராவ் மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மாநில பெண்கள் நல ஆணையத்தின் தலைவர் ருபாலி சகான்கர் எச்சரித்தார். இதையடுத்து, தற்போது அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com