குழந்தை குணமானது புனிதரின் அற்புதமா ?

குழந்தை குணமானது புனிதரின் அற்புதமா ?

குழந்தை குணமானது புனிதரின் அற்புதமா ?

ஒரு குழந்தை குணமானது கேரள கன்னியாஸ்திரி மரியம் தெரிஸாவால் நிகழ்ந்த அற்புதம் என சான்றளித்த மருத்துவரிடம் இந்திய மருத்துவ சங்கம் விளக்கம் கோரியுள்ளது. 

கேரள கன்னியாஸ்திரி மரியம் தெரிஸாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் பிரார்த்தனை செய்ததால் நோய்வாய்ப்பட்ட கிறிஸ்டோபர் என்ற குழந்தை குணமானது என்றும் இது அவரால் நிகழ்ந்த அற்புதம் என ரோமன் கத்தோலிக்க திருச்சபை அங்கீகரித்தது. 

கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் வி.கே. சீனிவாசன் என்பவர் அளித்த சான்றிதழின் அடிப்படையில் இது அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சான்றை அளித்த குழந்தைகள் நல மருத்துவரிடம் இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள பிரிவு விளக்கம் கேட்டுள்ளது. விஞ்ஞான அடிப்படை இல்லாத இந்த முறை குறித்து மருத்துவர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com