தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: காங். நாடு தழுவிய போராட்டம்

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: காங். நாடு தழுவிய போராட்டம்

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: காங். நாடு தழுவிய போராட்டம்
Published on

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அவற்றின் மீதான உற்பத்தி வரியைக் குறைக்க வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசு வேடிக்கைப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார். சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோது, உற்பத்தி வரியை பலமுறை விதித்து விலையைக் குறைக்காமல் மத்திய அரசு லாபம் பெற்றதாக அவர் கூறியுள்ளார். ஆனால், விலை உயரும்போது, வரியைக் குறைக்காமல் சாமானிய மக்களின் தலையில் சுமையை ஏற்றி, அரசு கொள்ளை லாபம் பெற்று வருவதாகவும் அஜய் மக்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு 100 ரூபாய் பெட்ரோலிலும் 52 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுவதாகக் கூறிய அவர், இந்த அநியாயத்தை எதிர்த்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com