ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?.. சென்னை உட்பட 8 இடங்களில் என்ஐஏ சோதனை

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?.. சென்னை உட்பட 8 இடங்களில் என்ஐஏ சோதனை
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?.. சென்னை உட்பட 8 இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை உட்பட தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்ய முயன்ற போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறையைச் சேர்ந்த சாதிக் பாஷா, ஜாபர் அலி, கோவையைச் சேர்ந்த முகமது ஆஷிக், காரைக்காலை சேர்ந்த முகமது இர்பான், சென்னையை சேர்ந்த ரஹ்மத் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் உள்ள இந்த கும்பலுக்கு, தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்தது. மேலும் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சமூக வலைதளம் வாயிலாக ஆட்களை திரட்டும் பணியிலும், நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்ததும், பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வந்ததும் என்.ஐ.ஏ.விற்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை அயனாவரத்தில் உள்ள ரஹ்மத் வீட்டிலும், மண்ணடியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட சென்னையில் 3 இடங்களிலும், மயிலாடுதுறை, கோவை, பாண்டிச்சேரி காரைக்கால் என மொத்தம் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கும்பலுக்கும் தீவிரவாத ஐ.எஸ் அமைப்பிற்கும் நேரடி தொடர்பு உள்ளதா, இவர்கள் கூட்டம் நடத்த நிதி உதவி எங்கிருந்து பெறப்படுகிறது உள்ளிட்ட ஆதாரங்களை திரட்டும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இவர்களுக்கு வழங்கியது யார் என்ற ஆதாரங்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இவர்களுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்ற தகவலை சேகரிக்கும் பணியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக சாதிக் பாஷா என்ற இக்காமா பாஷா இல்லம் அவரின் கூட்டாளிகள் உட்பட 5 பேர் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையில் ஐந்து இடங்களிலும் சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, அண்ணாசாலை ஆகிய மூன்று இடங்களிலும் காரைக்காலில் ஒரு இடத்திலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மண்ணடியில் ஹவாத் என்ற காம்ப்ளெக்ஸில. உள்ள தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் டில்லியில் இருந்து வந்துள்ள 5 அதிகாரிகள். சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இப்ராஹீம் 2 வது சந்தில் சாராம்மா என்பவரை தேடி வந்தனர். அவர் இல்லை என்பதால் புறப்பட்டு சென்றனர்.

அதேபோல் காரைக்கால் சுண்ணாம்பு கார வீதியில் உள்ள முஹம்மது இர்பான் என்பவரின் வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் வீட்டில் உள்ள நபர்களிடம் விசாரணை செய்து வீடு முழுவதும் ஏதேனும் ஆவணங்கள் இருக்கின்றதா என்று 4 மணி நேரம் சோதனை செய்தனர். இந்த சோதனையில் என்ன ஆவணங்களை எடுத்தனர் என்பது குறித்து தகவலை தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com