சாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள் 

சாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள் 
சாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள் 

உணவு வழங்கவில்லை என்பதற்காக கடையின் உரிமையாளரை கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாகியால் சுட்டுள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியிலுள்ள தாபா கடை ஒன்றிற்கு கான்ஸ்டபிள் சந்தீப் பலியான் வழக்கமாக சாப்பிட செல்வார். அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அங்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளர் நேரமாகி விட்டதால் சாப்பிட உணவு இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

இதனை ஏற்க மறுத்த சந்தீப் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கடை உரிமையாளரை நோக்கி சுட்டதாக தெரிகிறது. எனினும் அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டு அவர் மீது படவில்லை. இதனைத் தொடர்ந்து சந்தீப் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி அடீஸ் குமார் சிங், “வெள்ளிக்கிழமை இரவு உணவு சாப்பிட சந்தீப் சிங் தாபாவிற்கு சென்றுள்ளார். அங்கு உணவு இல்லாதததால் இவருக்கும் கடையின் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள் சந்தீப் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் 0.32 காலிபர் துப்பாக்கியை சந்தீப் பயன்படுத்தியுள்ளார். எனினும் காவல்துறை சார்பில் அவருக்கு துப்பாக்கி எதுவும் கொடுக்கவில்லை. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கான்ஸ்டபிள் சந்தீப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

மேலும் அவர் மீது ஐபிசி 307 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com