டிவி விவாதங்களில் பங்கேற்க காங். செய்தி தொடர்பாளர்களுக்குத் தடை!

டிவி விவாதங்களில் பங்கேற்க காங். செய்தி தொடர்பாளர்களுக்குத் தடை!

டிவி விவாதங்களில் பங்கேற்க காங். செய்தி தொடர்பாளர்களுக்குத் தடை!
Published on

டி.வி. விவாதங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்பதற்கு, அந்தக் கட்சி ஒரு மாதம் தடை விதித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்வியை எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி, அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், டிவி.சேனல்களில் பங்கேற்க, இன்னும் ஒரு மாதத்துக்கு அந்தக் கட்சி தடை விதித்துள்ளது. இதை அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா இதைத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் டிவிட்டரில், ’’ டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை ஒரு மாதத்துக்கு அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் பிரதிநிதிகளை சேனல்கள் அழைக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com