congress suspends kerala mla rahul mamkootathil
ராகுல் மம்கூத்ததில்இன்ஸ்டா

மலையாள நடிகைகள் பாலியல் புகார்.. கட்சியிலிருந்து கேரள எம்.எல்.ஏ. அதிரடி இடைநீக்கம்!

மலையாள நடிகைகள் பாலியல் புகாரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து கேரள எம்.எல்.ஏ.வான ராகுல் மம்கூத்ததில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Published on
Summary

கேரள எம்.எல்.ஏ.வான ராகுல் மம்கூத்ததில் மீது, மலையாள நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியிருந்தார். இந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாள நடிகையும் எழுத்தாளருமான ரினி ஆன் ஜார்ஜ், எந்தப் பெயரையும் குறிப்பிடாமல், ஒரு பிரபலமான அரசியல் கட்சியின் ஓர் இளம் தலைவர் தனக்கு எதிராகத் தவறாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் அவர், எந்தப் பெயரையும் வெளியிடவில்லை என்றாலும், பாஜக மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் ராகுல் மம்கூத்ததின் பெயரைக் குற்றஞ்சாட்டியிருந்தன. இதற்கிடையே, எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது, மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களது குற்றச்சாட்டின் பேரில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகுல் மம்கூத்ததில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். மேலும், அவருக்கு எதிராகவும் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன. அவர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கட்சிக்குள்ளும் வெளியிலும் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அவர் பதவி விலகிய சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

congress suspends kerala mla rahul mamkootathil
ராகுல் மம்கூத்ததில்இன்ஸ்டா

இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், AICC பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலின் மனைவி ஆஷா கே, ஒரு அரசியல் தலைவரின் நடத்தை குறித்த தொந்தரவான செய்திகள் குறித்து கவலை தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் மம்கூத்ததிலின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இப்போது நீக்கப்பட்ட பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, ”இந்தக் குற்றச்சாட்டுகளை நான் தனித்தனியாக எதிர்கொள்வேன். தனக்கு எதிராக முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஏதேனும் இருந்தால், அவர்கள் புகார் அளிக்கலாம். நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்ததில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

congress suspends kerala mla rahul mamkootathil
மலையாள நடிகைகள் அடுத்தடுத்து புகார்.. கட்சிப் பதவியை ராஜினாமா செய்த காங். எம்.எல்.ஏ.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com