கர்நாடகாவில் நிகழ்ந்த கார் விபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சித்துநைமா கவுடா உயிரிழந்தார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜம்காந்தி ( Jamkhandi) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சித்துநைமா கவுடா. கோவாவில் இருந்து பாகல்கோட்டிற்கு தனது காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது துளசிகெரி பகுதியில் இவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் எம்எல்ஏ சித்துநைமா கவுடா பரிதாபமாக உயிரிழந்தார். ஜம்காந்தி ( Jamkhandi) தொகுதியில் பாஜக வேட்பாளரான குல்கர்னி ஸ்ரீகாந்தைவிட 2975 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது சித்துநைமா கவுடா மரணத்தையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.