காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக்விஜய சிங்குக்கு கொரோனா பாதிப்பு..!

காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக்விஜய சிங்குக்கு கொரோனா பாதிப்பு..!
காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக்விஜய சிங்குக்கு கொரோனா பாதிப்பு..!

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் திக்விஜயா சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 5 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல் மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரான திக்விஜய சிங்கும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாக பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com