’மன்மோகன் சிங் கொரோனாவிலிருந்து நலம்பெறட்டும்’ - பிரதமர் மோடி வாழ்த்து!

’மன்மோகன் சிங் கொரோனாவிலிருந்து நலம்பெறட்டும்’ - பிரதமர் மோடி வாழ்த்து!
’மன்மோகன் சிங் கொரோனாவிலிருந்து நலம்பெறட்டும்’ - பிரதமர் மோடி வாழ்த்து!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து அவர் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமாத்துறையினர், அரசியல்வாதிகள் என பலதுறைகளின் பிரபங்களும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் மீண்டு வரவேண்டும்” என்று வாழ்த்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் மன்மோகன் சிங் குணமாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com